search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் காப்பகம்"

    • காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் உள்ளது.
    • இன்று அதிகாலை காப்பகத்தில் இருந்த 6 பெண்கள் திடீரென மாயமானார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் உள்ளது. இங்கு ஆதரவற்ற பெண்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் போலீசாரால் மீட்கப்படும் சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை காப்பகத்தில் இருந்த 6 பெண்கள் திடீரென மாயமானார்கள். காப்பக பாதுகாவலர் ஆய்வு செய்தபோது 6 பேர் காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. அவர்கள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் காதல் விவகாரத்தில் மீட்கப்பட்டவர்கள் என்றும் தெரிகிறது.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படட்டது. போலீசார் மாயமான பெண்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×